செய்தேன் தவறை என் பிழை தவறி
ஆனாலும் என் மனசு கேர்க்கவில்லயடி கண்ணே , உண்ணவளை பார்த்தா இப்படி சொன்னாய் என்று உள் மனது என்னிடம் போராடுகிறது.
நானும் அறிந்தேன் என்னவளே உன்னிடம் தெரிந்தும் தெரியாமலும் நான் அப்படி சொல்லி இருக்க கூடாது ,என் காதலை தவிர வேறு எதுவும் உனக்கு மிக பெரிய சந்தோசத்தை தரப்போவதில்லை என்று.
என் உதடுகளுக்கு என்னை விட வேகம் அதிகம், ஆனால் விவேகம் இல்லை அதனால் தான் என் மனதும் உதடும் நடத்திய போரில் என் மனது வென்று உன்னிடம் சமரசம் நடத்தியதோ..
மீண்டும் ஒரு தவம் செய்தாலும் நீ எனக்கு கிடைப்பாய் என யார் எனக்கு உறுதி தரமுடியும்?
அதனால் தானடி பெண்ணே இந்த ஜென்மத்தில் நான் செய்த பிழைக்கு ஒரு முறை மட்டும் என்னை மன்னித்து விடு, காலம் முழுவதும் உன்னை இமை மேல் பூத்த பூக்களாய் நான் உன்னிடம் வாசம் வீசுவேன்.
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு சொல்ல தெரியவில்லை, வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள். கடலை தேடி நதிகள் செல்கின்றன, போகும் வழியில் அது தாண்டும் தடையை போல் உன் காதலை நான் அடைய நான் தாண்டிய தடைகளில் இதுவும் ஒன்றே ஒன்று.
உயிரே என் உதிரமே ...
நீ இல்லாத என் மீதமுள்ள வாழ்வில் என்னால் வாழ முடியாது. நிச்சயம் நீ இல்லாத இவ்வுலகில் என் வாழ்வு பாலைவனத்தில் தனிமையில் வசிக்கும் பறவையை போன்றது.
வேண்டாம் நமக்குள் ஒரு நிமிட ஊடல் கூட வேண்டாம். நான் என்ன செய்தாலும் நீ என்னிடம் இருப்பேன் என்றாய், எனக்கு அதுவே உன் மீதான காதலை மேலும் வலுப்படுத்துகிறது.
ஆம் உன் விழி நேற்று அழுததில் என் இதயமும் தோற்றுப்போனது. உன் விழிகள் என் காதலை வெளிப்படுத்தும் முத்தத்தை மட்டுமே காண படைக்கப்பட்டது. ஆம் என்னை காணவே உனது விழிகள் படைக்கப்பட்டது.
போதும் பெண்ணே போதும் உன் புன்னகையால் என்னை வென்று விட்டாய். உன் நாணத்தால் என்னை கொன்று விட்டாய். காலம் முழுவதும் என்னிடம் நீ இப்படியே இருக்க வேண்டுகிறேன் ...
உன் மீதான காதலை நானும்
என் மீதான காதலை நீயும்
மாறி மாறி ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொண்டே இருப்போம்.
இருவரின் ஆயுளும்
ஒரேநாளில்
ஒரேநேரத்தில்
ஒற்றைக்கணத்தில்
முடியும்
அந்த தருணம் வரை !
Comments
Post a Comment