நான் அவளுக்கு எழுதிய கவிதை.


உலக அதிசயங்கள் எல்லாம் கற்களால் ஆனதடி, இல்லையேல் உன்னையும் அதில் சேர்த்து இருப்பார்கள்.

உன் முதல் பார்வை என்னை தழுவியபோது என்னுள் உடைந்து நழுவிய உணர்வுக்கு நான் வைத்த பெயர் தான் காதல் .

நீ சிரிக்கும் சிரிப்பின் அழகை என்னவென்று சொல்ல, தளும்பி தளும்பி செல்லும் நதியின்  ஓசையை  கேட்க ஏங்கும்  மனதை போல் என் செவிகளுக்கு உன் சிரிப்பை அளி மீண்டும் ஒருமுறை விருந்தளிக்க

உன் கண்கள் நூறாயிரம் மின் மினி பூச்சிகள் ஒன்று கூடிய ஒளியை விட மோசமானது. ஆம் அந்த வெளிச்சத்தில் தான் என்னை என் விழியின் பார்வையை பறிகொடுத்தேன்.

நான் உன்னை நேரில் காணும்போது நீ ஒவ்வொருமுறை அடைகின்ற வெட்கம் எப்படி இருந்தது தெரியுமா? தாமரை தன் கதிரவன் வருகையில் தன் மீது பட்ட ஒளியில் அதன் இதழ்கள் சொல்லியதாம் ,  ஆம் உன்னவன் உனக்கானவன் வருகை புரிகிறான் நீ நாணத்தில் இதழ்களை மூடிக் கொல் அவனை என்று.
இதழ்களை மூடிக் கொல் அவனை என்று.
இதழ்களை மூடிக் கொல் அவனை என்று.  புரிகிறதா ?


ஒவ்வொரு முறையும் உன் வீட்டை கடக்கையில் நீ என்னை பார்க்கும் பார்வை எனக்கு மேலும் மேலும் காதலுக்கு வலிமை சேர்க்கிறது.

உன் புன்னகை என்னை நினைவிழக்க செய்கிறது. ஆம் அதில் தானோ உன் காதல் குடிகொண்டு என்னை மீட்டிய வீணை போல் துகில் கொள்ள செய்கிறது..

எத்தனை வார்த்தைகளால்
சொன்னாலும்
உனக்குப்
புரியப் போவதில்லை.
ஒரே ஒரு
முத்தத்தால் உணர்த்தி விடவா
என் காதலை ?

---------------------------------------;---------------

உன்னைத்
தீண்ட வேண்டும் எனும்
எண்ணமே
எனக்குள்
மொட்டுகளை மலர்த்தி விடுகிறது.
தீண்டி விட்டால்
மலர்ந்தவை
உலர்ந்து விடுமோ எனும்
அச்சமும் தலை விரிக்கிறது


அவிழ அவிழ
புதுப் புதுப் புதிர்கள்
புதிதாய் கிளைவிடுவது
காதலில் மட்டுமே.

புரிந்த இடத்தின் முடிவில்
புரியாமையின்
ஆரம்பம்
முளைவிடுவதும்
காதலில் மட்டும் தான்


ஒருமுறை தான்
காதல் வருமென்பதெல்லாம்
பொய்யடி பெண்ணே,
எனக்கு
புதிது புதிதாய்
காதல் வருகிறது
உன்
ஒவ்வோர் புன்னகையிலும்.


புன்னகைக்கும்
கண்ணீருக்கும்
இடைப்பட்ட தூரத்தில்
தான்
பயிராகின்றன
பலகோடிக் காதல்கள்.


உதடுகள் காதலில்
உரசும் வேளையில்
உடையா
மெளனம் உடைபடும்.

நீ சொன்னதற்கும்
நான் சொல்லாததற்குமான
வார்த்தைகளுக்கு
இடையே
ஏராளமாய் கிடக்கின்றன
உண்மையின் வார்த்தைகள்.

நான் காணும்
இரவுக் கனவுகளுக்கான
பதிலை
பகலில் சந்திக்கும் போது
நீ
தருவாயானால்
அங்கே முளைக்கும்
என் காதல் நதி.


காதல்
உலகத்தின் அளவென்றால்
மிச்ச அளவை
எங்கே வைப்பதடி ?
பேசாமல்
உன் கண் அளவு என்று சொல்
இன்னும்
அந்தக் கிரகத்தின்
தன்மை அறியவில்லை விஞ்ஞானம்.


இந்த வயசில் காதலா
என்று தான்
எல்லோரும் கேட்கிறீர்கள்
அது சரி
எந்த வயதில் காதலித்தால்
ஒத்துக் கொள்வீர்கள் ?


காதல்
என்
கரம்பிடித்து நடந்தபோதெல்லாம்
யாரும்
அழகாய் தெரியவில்லை.

எதிர்ப்படுவோர்
அழகாய் தெரிந்த
ஓர் கணத்தில்
திரும்பிப் பார்த்தேன்
திரும்பி
நடந்து கொண்டிருந்தது
என் காதல்.

எத்தனை
அழகென்று
சொல்லமுடியாப் பட்டியலில்
உன்
விழிகளையும் சேர்த்து விட்டேன்.


எழுதியவர்களுக்கும்
புரியாத
ஒரே கவிதை
காதல்.

நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.

இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு.



Comments

Popular posts from this blog

என்னவள் எனக்கு எழுதிய கவிதைகள்

U P