U P

விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்...

படிக்காமலேயே
மனப் பாடமாகிப்போனது
உன் நினைவுகள்

உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடி

கண்களில் கைதாக்கி
இதயத்தில் சிறைவைத்து
உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு
இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு

நேற்று வரை எதையோ தேடினேன்
இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக

Comments

Popular posts from this blog

நான் அவளுக்கு எழுதிய கவிதை.

என்னவள் எனக்கு எழுதிய கவிதைகள்