அவளிடம் இருந்து வந்த கவிதைகள் என்னை பற்றி ஏராளம், அதில் சில இங்கே என்னவனே உன் முகம் கண்ட நாள் முதல் என் மூச்சு காற்றே உனக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது, நான் தேடும் நாட்களில் நீ கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாழ்வு மறையும் முன் உன்னை பார்க்க கடவுளின் சித்தம் நெருங்கி விட்டது.நான் வாழக்கையில் தேடிய உயிர் வரம் நீ, உன் மூச்சு, பேச்சு, இதயம், சுவாசம் , எங்குமே நான் நிரம்ப வேண்டும். என்னைத்தவிர உனக்கு வேறெதுவும் கண்ணில் பட கூடாது. வாழ்வில் எது அழிந்து போனாலும் உன்னை விரும்பும் இதயம் மட்டும் நின்று போக கூடாது . கண்கள் மூடினால் கனவுகள் கலைந்து போகுமே என்று தினம் தினம் விழித்துக்கொண்டே இருக்கிறேன் , என் கண்ணில் நீர் வழிந்தால் உன் உருவம் கரைந்து போகுமே என்று கண்ணீரை துடைக்க மறுக்கிறேன். உன் வாழ்வை பங்கிட முடியாத, ஆட்படுத்த முடியாதவளாக நான் இருந்தாலும் .. தோற்றுப்போவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஏனென்றால் வாழ்வது உன் உயிர் அல்ல, என் உயிர் உன்னிடத்தில். ஆகவே நான் கனவுகளோடு போராடி என் சந்தோசங்களை மீட்டெடுப்பேன். உன் மனம் வென்ற என் காதல் நினைவுகளை...