Posts

U P

விழிகளுக்குள் நீயிருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்... படிக்காமலேயே மனப் பாடமாகிப்போனது உன் நினைவுகள் உன்னுள் உறைந்து உலகம் மறக்க ஆசையடி கண்களில் கைதாக்கி இதயத்தில் சிறைவைத்து உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய் உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு நேற்று வரை எதையோ தேடினேன் இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக

செய்தேன் தவறை என் பிழை தவறி

ஆனாலும் என் மனசு கேர்க்கவில்லயடி கண்ணே  , உண்ணவளை பார்த்தா இப்படி சொன்னாய் என்று உள் மனது என்னிடம் போராடுகிறது. நானும் அறிந்தேன் என்னவளே உன்னிடம் தெரிந்தும் தெரியாமலும் நான் அப்படி சொல்லி இருக்க கூடாது ,என் காதலை தவிர வேறு எதுவும் உனக்கு மிக பெரிய சந்தோசத்தை தரப்போவதில்லை என்று. என் உதடுகளுக்கு என்னை விட வேகம் அதிகம், ஆனால் விவேகம் இல்லை  அதனால் தான் என் மனதும் உதடும் நடத்திய போரில் என் மனது வென்று உன்னிடம் சமரசம் நடத்தியதோ.. மீண்டும் ஒரு தவம் செய்தாலும் நீ எனக்கு கிடைப்பாய் என யார் எனக்கு உறுதி தரமுடியும்? அதனால் தானடி பெண்ணே இந்த ஜென்மத்தில் நான் செய்த பிழைக்கு ஒரு முறை மட்டும் என்னை மன்னித்து விடு, காலம் முழுவதும் உன்னை இமை மேல் பூத்த பூக்களாய் நான் உன்னிடம் வாசம் வீசுவேன். நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு சொல்ல தெரியவில்லை, வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள். கடலை தேடி நதிகள் செல்கின்றன, போகும் வழியில் அது தாண்டும் தடையை போல் உன் காதலை நான் அடைய நான் தாண்டிய தடைகளில் இதுவும் ஒன்றே ஒன்று. உயிரே என் உதிரமே ... நீ இல்லாத என் மீதமுள்ள வாழ்வில் என்னால் வாழ முடியா...

நான் அவளுக்கு எழுதிய கவிதை.

உலக அதிசயங்கள் எல்லாம் கற்களால் ஆனதடி, இல்லையேல் உன்னையும் அதில் சேர்த்து இருப்பார்கள். உன் முதல் பார்வை என்னை தழுவியபோது என்னுள் உடைந்து நழுவிய உணர்வுக்கு நான் வைத்த பெயர் தான் காதல் . நீ சிரிக்கும் சிரிப்பின் அழகை என்னவென்று சொல்ல, தளும்பி தளும்பி செல்லும் நதியின்  ஓசையை  கேட்க ஏங்கும்  மனதை போல் என் செவிகளுக்கு உன் சிரிப்பை அளி மீண்டும் ஒருமுறை விருந்தளிக்க உன் கண்கள் நூறாயிரம் மின் மினி பூச்சிகள் ஒன்று கூடிய ஒளியை விட மோசமானது. ஆம் அந்த வெளிச்சத்தில் தான் என்னை என் விழியின் பார்வையை பறிகொடுத்தேன். நான் உன்னை நேரில் காணும்போது நீ ஒவ்வொருமுறை அடைகின்ற வெட்கம் எப்படி இருந்தது தெரியுமா? தாமரை தன் கதிரவன் வருகையில் தன் மீது பட்ட ஒளியில் அதன் இதழ்கள் சொல்லியதாம் ,  ஆம் உன்னவன் உனக்கானவன் வருகை புரிகிறான் நீ நாணத்தில் இதழ்களை மூடிக் கொல் அவனை என்று. இதழ்களை மூடிக் கொல் அவனை என்று. இதழ்களை மூடிக் கொல் அவனை என்று.  புரிகிறதா ? ஒவ்வொரு முறையும் உன் வீட்டை கடக்கையில் நீ என்னை பார்க்கும் பார்வை எனக்கு மேலும் மேலும் காதலுக்கு வலிமை சேர்க்கிறது. உன் புன்ன...

என்னவள் எனக்கு எழுதிய கவிதைகள்

அவளிடம் இருந்து வந்த கவிதைகள் என்னை பற்றி ஏராளம், அதில் சில இங்கே என்னவனே உன் முகம் கண்ட நாள் முதல் என் மூச்சு காற்றே உனக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது, நான் தேடும் நாட்களில் நீ கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாழ்வு மறையும் முன் உன்னை பார்க்க கடவுளின்  சித்தம் நெருங்கி  விட்டது.நான் வாழக்கையில் தேடிய உயிர் வரம்  நீ,  உன் மூச்சு, பேச்சு, இதயம், சுவாசம் , எங்குமே நான் நிரம்ப வேண்டும். என்னைத்தவிர உனக்கு வேறெதுவும் கண்ணில் பட கூடாது. வாழ்வில் எது அழிந்து   போனாலும் உன்னை விரும்பும் இதயம் மட்டும் நின்று போக கூடாது . கண்கள் மூடினால் கனவுகள் கலைந்து போகுமே என்று தினம் தினம் விழித்துக்கொண்டே இருக்கிறேன் , என் கண்ணில் நீர் வழிந்தால் உன் உருவம் கரைந்து போகுமே என்று கண்ணீரை துடைக்க மறுக்கிறேன். உன் வாழ்வை பங்கிட முடியாத, ஆட்படுத்த முடியாதவளாக நான் இருந்தாலும் .. தோற்றுப்போவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஏனென்றால் வாழ்வது உன் உயிர் அல்ல, என் உயிர் உன்னிடத்தில். ஆகவே நான் கனவுகளோடு போராடி என் சந்தோசங்களை மீட்டெடுப்பேன். உன் மனம் வென்ற என் காதல் நினைவுகளை...